உன் கைகளைப் பற்றிக்கொண்டு
நரைமுடிகள்
சிரிக்கும் போதும்
அவற்றின் அதிகரிப்பை
கணக்கிட்ப்படியே
நடைபோட
ஆசைக்கொள்ளலாம்...!
ஏழு ஸ்வரங்களுடன்
முட்டி மோதி
ஏழு அதிசயங்களையும்
மிஞ்சி எட்டாவததிசயமாக
என்னிதய வாத்தியத்தில்
உனக்காக ஒரு
இசையை மீட்டிட
எண்ணம் கொள்ளலாம்...!
என் அறிவை ஏமாற்றி
எனக்குள்ளே இயல்பாகும்
என் அறியாமையில்
உன் அன்பை ஏற்றிட
தோனலாம்..!
ஆயிரம் விளக்குகள்
ஓர் இடத்தில் ஒளிர
அந்த பிரகாசத்தின்
விட்டுக்கொடுப்பில்
வாழ்க்கை நடத்திட
விரும்பலாம்...!
உன் அன்னைக்கு
இன்னொரு சேயாகவும்
உன் நீண்ட வாழ்க்கைப்
புத்தகத்தின் ஏடுகளாகவும்
எதிர்ப்பாக்கலாம்...!
காலத்தின் மௌனம்
கலைத்து- அது
உன் பெயரை என்
செவிகளின் மென்சவ்வும்
அதிர......
இரைச்சலின்றி தெளிவாக
சொல்லிவிட்டுச் சென்றால்....!
...பிரிய சகி...