வெள்ளி, 11 மார்ச், 2016

இடம்மாறும் வாழ்க்கை

மழைத்துளிகளை 
இரசித்துவிட்டேன் நான்
அதன் முடிவில்
துளிகளைக் காணாது
அழுதுவிடுகிறது
என் இரசனை....
அப்போது,
எனக்காய் அவற்றை
முன்கூட்டியே சேமித்து
மீண்டும் ஒரு மழையைத்
தந்திடும் மரங்களை
காதலிக்கின்றேன்....!

ம்ம்ம்.........
அப்படியென்றால்..,
நான் புகவிருக்கும்
என் வாழ்க்கை இல்லமும்
(புகுந்த வீடு)
என் தாய்வீட்டுப் பாசத்தை
சேமிக்கின்றதல்லவா
எனக்காக.....!

காதலுடன்
மருமகளாய்,
அண்ணியாய்,
மனைவியாய்....!

பிரியசகி
11.03.2016

அழகில்லாதவனா நீ....?

என் பார்வைகளைப்
பத்திரப்படுத்துகிறேன்
நான் அறியாமலும்
உன்னைப் வெறுத்திடக்
கூடாது என்பதற்க்காக....!

உன் அழகான பாசத்தில்
மதி மயங்கிக் கிடக்கிறேனே
வெறுப்புக் குடிகொள்ள
என் மனம் தான் இடமளியுமோ....!

பார்வையை துரத்திவிடுகிறேன்
பரிசுத்தமான உன் 
காதலை இதயத்தில்
ஏற்றி என் அறிவிற்கு 
ஒளி சேர...!

பிரியசகி
11.03.2016

குறைகளை மறைக்கும் காதல்

என் உருவ அழகை
குறை என நினைக்கும்
உன் மனதிலும்
ஓர் அழகைக் 
காணத்தான் செய்கிறது
உன் மீதான என் காதல்
நெஞ்சம்.....!

பிரியசகி
11.03.2016

ஞாயிறு, 6 மார்ச், 2016

ஒரு வாழ்த்தில் உள்ளம்....?

அன்று மேகத் தூறல்
பூமி நனைந்ததும்
தெரியாமல்
வந்துப்போனது....!

மேகத்தின் முழு அனைப்பிற்காய்
காத்திருந்த பூமி
கோபச்சூட்டோடு 
புழுதியை தூண்டிவிட்டது....!

அவளும்தான் காத்திருந்தாள்
"செல்லம் தங்கம்" என்றெல்லாம்
அதே கொஞ்சல்களால் 
கொண்டாடப்படுவாள்
என.....!

இத்தனை வருடங்களாய்
செல்லமாய் திரிந்த சிட்டு
இன்று யாரும் 
கண்டுக்கொள்ளாத 
ஒரு வீட்டு ஈ போல்தான்
திரிகிறதோ....!

"இன்னொரு சொந்தம்
வந்ததும் நான்
யாரோவாகிப்போனேனோ...?
வந்தவள் தடுத்திருப்பாள்..."

அவள் மன அலைகள்
அவள் ஏக்கங்களைக்
குடித்து 
சிறு திரியில் தீயென
நிருத்தம் 
ஆடிக்கொண்டிருந்தது
கடிகார முட்கள்
பன்னிரெண்டு ஐந்தை 
முத்தமிட முயற்சிக்கும்
வேளை...!

ஒரு கரம் அந்த சிட்டின்
தலை தடவியது...
"HAPPY BIRTHDAY DA
எங்க வீட்டுச்செல்லம்...!"
வாழ்த்தொலி அவள் 
செவியில் விழ
தாய்ப்பால் அருந்தி முடித்த
குழந்தையாய் கண்ணீர்
மறைத்து இதழ் விரித்தாள்...!

"என் செல்லத் தங்கைக்கு 
அண்ணனோட பிறந்த நாள்
பரிசு"
பரிசை விலக்கி 
முகம் காட்டி சிரித்து
தங்கையவள் பதில்
சிரிப்பை எதிர்பாத்தவனாய்
அண்ணன்....!

"Hey ரொம்ப அழுதிருக்க போல..."
நீ பிறந்த நேரத்திலயே 
Wish பண்ணுவம்னு உ
அன்னிதான்பா சொன்னா..."

அண்ணன் சொல்லி 
முடிக்கையில்
அன்னியை இறுக 
அனைத்துக்கொள்கிறாள்
"Sorry அன்னி...!"

....பிரியசகி....