ஞாயிறு, 20 நவம்பர், 2016

பிடித்துத் தாருங்கள்


பறக்கும் வண்ணத்துப்பூச்சியை
பிடித்துத் தாருங்கள்
அதன் சுதந்திரத்தை
பறித்துக்கொண்டு
விட்டுவிடுகிறேன்...!

....பிரியகி....

2016.11.13

அவள் மனம் சொல்லும் அழகுணர்வு

சிரிப்பில் சிலை செய்கிறாய்
சின்ன கன்னங்கள் 
சிந்திக்கும்,

தாடை நுனியில்தான்
அழகை 
குவித்திருக்கிறாளோ...?

மேல் உதட்டைப் புதைத்து 
மூக்கைத் தொடும்
இரு கோடுகளில்தான்
சூட்சுமம் ஒளித்திருக்கிறாளோ...?

அவள் கண்கள் காணாத 
அதிசயம்.....!

அவள் மனம் சொல்லும்
அழகுணர்வு 
ஓடிக்கொண்டிருக்கிறது
வரிகளாக,
அவள் நெற்றியில்...!

அவள் வாய் சிரிப்பிற்கு
துணையாக சிரிக்கும்
கண்ணோரச் சுருக்கங்ள்
செவிகளுக்கு 
இரகசிய தூது அனுப்ப 
முயல்கிறது.....!

....பிரியசகி....
2016.11.12

நிலையான அன்பு நீ எனக்கு வேண்டும்!

நிலையான அன்பு
நீ எனக்கு வேண்டும்!

நீ பருகும் நித்திய
தேனீராய்
உன் நட்பு எனக்கு!
குழந்தையாய் உன்
நெஞ்சிலும் சுருளுவேன்!
தாயாய் எனக்குள்ளும்
அணைப்பேன்!
உன் முத்தங்கள்
என் அணுக்களை 
துளிர்விடச் செய்யலாம்!
என் ஏற்புக்கள் உன்னை 
நிலைக்கச் செய்யலாம்!

நிலையான அன்பே.....!
நீ....
எனக்கு வேண்டும்......!

....பிரியகி....
2016.11.13

உயிர்கள் பேசும் மௌனம்....,

உயிர்கள் பேசும் மௌனம்....,
உணர்வுகள் அமைதியின்
ஊஞ்சலில்......,
காற்றோடு மோகனம்
இசைக்கும்
இரு இதய சுவாசம்....,
அவள் உள்ளெடுக்கும்
மூச்சிலே,
அவன் பாசத்தில்
சிரிக்கும் குழந்தையில்
அர்த்தமாக்கப்படுகிறது
காதலும்தான்......!

....பிரியசகி....
2016.11.13