கண்ணாடி தெளிவிற்க்குள்
புன்னகையின் முனங்களில்
இதழ் அலைய
அதில் இரகசியம்
ஒழிகையில்
அழகு நனைகிறது....!
மோகன மோட்சம்
புதிதாய் பிறந்து
எண்ணங்களைப்
புரட்டிவிட்ட
வசிய துளிக்குள்
மௌனமாகையில்
யௌவனம் கரைகிறது....!
தங்கை என் கைகோர்த்து
நெடுஞ்சாலை வழியே
நடந்து செல்கையில்
கடந்து சென்ற
காற்றோடு கலந்து
கோர்ந்திருந்த கைகளின்
ஸ்பரிசத்தோடு உறவாடி
சென்றது....!
வீட்டிற்குள் தம்பியோடு
போட்ட செல்லச் சண்டையில்
என்னிலிருந்து விடுப்பட்ட
தனிமையோடு
தவறிவிடப்பட்ட அது,
எங்கே விடுபட்டது...?
என யோசிக்கச் செய்து
மீண்டும் இணைந்திட்ட
அதே தனிமையோடு
தொற்றிக்கொண்டது...!
நான் கொஞ்சிய
மழலையோடு மலர்ந்திட்ட
பாசத்தில் பூத்த
மென்மையில்...
அதுவும் ஒரு மலராகி
என்னிரு பக்க கன்னங்களிலும்
பூசி விளையாடிக்கொள்ளச்
சொல்லி கெஞ்சியது...!
தோழியோடு தோள் சாய்ந்து
குரங்கு சேட்டைகளோடு
எடுத்துக்கொண்ட
சுயப்பதிவில்
இடைப்புகுந்து
கட்புலன் இல்லா உருவமாய்
வரிகளற்ற பாடலோடு
என் இதயத்துள்
உலா வரலானது...!
நண்பனோடு
அரட்டையடித்து
நட்புணர்ந்து
பேசிய வேளையில்
ஒழிந்து நின்று
வேடிக்கைப் பார்த்திட்ட
அதன் ஏக்கத்தை
புரிந்துக்கொள்ளச் சொல்லி
வற்புறுத்தியது....!
அம்மா மடிமீது
குழந்தையாகி
குந்துகையயில்
இலகிய இதயசாரலோடு
போட்டியிடுவதற்காய்
என் சிறு வெற்றிடத்திலிருந்து
முளைத்திட்ட அதை
மணந்திடவும்
ஆசைக்காட்டியது...!
இறுதியாய் இதயம்
இளைப்பாறும் இந் நேரத்தில்
சத்தமில்லா சங்கீதமாய்
என் வாழ்வின் பயன
லயத்தோடு இளைந்திட்ட
அந்த மறைப்பொருளை
இதயத்தில் இறுக்கி
"நீ யார். ?" என கேட்க...,
"உன் வாழ்வோடு
ஒட்டிக்கொள்ள
உன் பருவ ஏவலில்
உன் உள்ளத்திலிருந்து
பிறப்பிக்கப்பட்ட
ஓர் புனிதம்..." என்கிறது...!
ம்ம்ம்ம்ம்.....
என் சுவைகளுக்குள்
புதிதாய் பிறக்க
காதல் சுவை
கருகொள்கிறது போலும்
என் இதய அறைக்குள்...!
ஸ்ஸ்ஸ்....
நட்சத்திரங்கள் எல்லாம்
ஒற்றைக் கண்ணடிக்கின்றன.
விடியும் வரை காத்திருக்கும்
விடிவெள்ளிக்கு பதில்
சொல்லவும் வேண்டும்.
இரவை கொஞ்சம்
அமைதிபடுத்துங்கள்....,
என் இறுதி சடங்கிலும்
காதலை
உணர்த்தப்போகும்
அந்த உறவை
தேர்ந்தெடுக்க
வேண்டாமோ....!
....பிரியசகி...