லேசானக் காற்றில்
சிறகடிக்கும் சிறகின்
சுதந்திரமோர்
கிணற்று நிலா....
சமுதாய பந்தத்தில்
இருக்கும் சுதந்திரத்தை
வெறும் விம்பமாய்
ஆக்கும் அந்த
ஒன்றை,
ஏதோவோர் முடிச்சுக்குள் சாமத்தியமாய் செயல்படும்
அந்தவொன்றை,
நசுக்கி கசக்கி
கொன்றொழிக்கும்
திரவத்தையோ
திண்மத்தையோ
ஏதோவோர் ஆயுதத்தை
கண்டுப்பிடிக்க
புள்ளியிடுகிறேன்....
செடிகளின் துளிர்
இயற்கையின் பிடியிலும்
கருகிடாது மென்மை
காக்கின்றனர் சிலர்.
அன்பிலும் அறிவிலும்
இன்பம் சேர்கிறது....
பச்சை இலைகளையும்
கருகச்செய்து தீ
மூட்டுகின்றனர் சிலர்.
ஆத்திரமும் ஆதங்கமும்
வேதனையில்
உயிர்பெறுகிறது....
பறந்துக்கொண்டுதான்
இருக்கிறோம்
சுகம் பேசும்
நீள/நீல வானில்
அல்ல,
முட்கள் முனங்கும்
நீசர்களின் நிலத்தில்....
நீதி உறங்க
நிம்மதி அழுகிறது...
ம்ம்ம்...
சொல்லி
மாறப்போவதில்லை,
சொல்லாமல்
செல்கிறேன்
சொல்ல வந்ததை....
ஃ........ ......... .......
ம் ம் ம்....
கொஞ்சம் பொறுங்கள்
சொல்லிவிட்டே செல்கிறேன்....
நெருசல் நிறைந்த
பேரூந்து
பத்திரமாய் உள்
நுளைந்தாள்
மிதிப்பலகையில் தொங்கியது
இளைஞர்கள் உதவியோடு....
நெருசல் குறைந்த
பேரூந்து
மரியாதையும் பக்குவமும்
கூடியதான முகத்தோற்றம்
அருகே அமர்ந்தாள்
.... ... ... ....
அவனொரு ஆண்
என்பதை
அவளுக்கு தெரியப்படுத்த
முயன்றதை
நான் சொல்ல விரும்பவில்லை....
அவளே பேச்சுவாக்கில்
கொஞ்சம் தடம்மாறும்
போது
"சொல்லுமா தங்கச்சி" என
சின்னவளை ஆற்றுப்படுத்துகிறான்
யாரோ ஓர் அண்ணன்...
மகளின் உயர் படிப்பிற்கு
கையேந்துகிற குடிசைத்
தாயிற்கு
உதவியக் கையின்
நச்சரிப்பிற்கு
உடல் தீண்டவும் அனுமதிக்
கேட்கிறான்
மிக கௌரவமாக....
ஏன் இப்படி....?
எங்கள் சுதந்திரம்
நீர்குவளைக்குள்குள்தானா?
....பிரிய சகி....
2016.04.18