சனி, 17 டிசம்பர், 2016

வகுப்பறை முதல் நாள்....

காற்றிலே வீசும்
பூ வாசம்
மழலைகளில் வீசும்
மொழி வாசம்....!

நட்சத்திரப் பூக்கள்
நிறைந்த வகுப்பறை,
ஒவ்வொருவரும்
பேச்சுப் பழகும்
செல்லக் கிளிகள்....!

மழை நீர் சேமித்த
செடி இலைகள்
அசைந்து ,
தானே தூவிய
பூத்தூரலாய்
சிட்டுகளின் குரலோசை....!

"வகுப்பறை முகாமைத்துவம்"
எனும் நூலில்
சிக்கிய சிலந்தியென நான்....!

கொதித்துப் பொங்கும்
பாலின் குதூகலம் அடங்க
உள் நுழைகிறேன்....!

சிறகு விரிக்க
எத்தனிக்கும் சிட்டுகளை
ஓரிடம் செதுக்கி
பதிப்பதில்தான்
கொஞ்சம் சஞ்சலப்பட்டு போனது
மனம்....!

"எங்கள் புது ஆசிரியை"
என செல்லமாய்
ஒட்டிக்கொண்ட 
பிஞ்சு உள்ளங்களில்
அழகாய் அப்பிக்கொண்டது
எனதுள்ளமும் தான்....!

இனி என் சந்தோசம்
பரவும் ஒரே இடம்...
நிரந்தர நிம்மதி உறங்கும்
இடம்
மழலைகளின் உள்ளம்
ஒன்றே.....!

....பிரியசகி....
2016.12.17

வெள்ளி, 16 டிசம்பர், 2016

வெளிச்சம்

இருள் வானில்
வான் பிரகாசிக்க
மின்னும் நட்சத்திரங்களை
தீப்பொறிகள் தெளித்து
அணைக்க எத்தனிக்கும்
விதி அறியாத 
இந்தச் சின்ன உலகம்...!

உயிர்கள் உருவாக்கத்தின்
இரகசியம் தேடியழைகின்றனர்
மனித அபிமானிகள்....!

உள்ளதை கண்டுபிடித்திடும்
மனித அறிவியல்.
உருவான கதை மட்டும்
ஏனோ... 
உளரிதான் வைக்கப்படுகிறது....!

உள்ளம்...
உணர்வு...
உணர்ச்சி...
இவை வெற்று உடலுக்குள்
காலங்கள் கடந்த
ஆத்மாக்கள் சுரக்கும்
அமுர்த விம்பங்கள்....!

அந்த விம்பங்கள்
தேகத்துக்குள் நதியென
ஓடும்
போகுமிடம் அறியாமலே...!

தான் நிலைக்க
தான் அற்ற பிறர்
நிலை அழிக்கத் துடிப்பதுதான்
அவ் விம்பங்களில்
தெறிக்கும் கூத்து....!

அன்பென்ற பூக்களின்
செயற்கை வாசம்
அகிலம் எங்கும் வீசும்,
யுத்த வன்முறைகளும்
அங்கேயே வேசம் போடும்....!

உண்மை வெளிச்சம்
மனிதவுடல் கண்களிலில்லை
இறை ஆத்மா ஒன்றே
உணரும்....!

பார் தாண்டிய பார்வையை
வீசி உண்மையை
உணர்...
அழிப்பதை மற...
நிலைப்பதையும் மற...!

அதோ தீப்பொறிகள்
ஒரு புறம்
மின்னும் நட்சத்திரங்கள்
ஒரு புறம்...
இறை ஒளி
இதமாக....
மூங்கில் காடுகளில்....!

பிரியசகி
2016.12.16

மேக காதல்...

என் வீட்டு முற்றத்திற்கு
தினம் வந்து போகும்
சிட்டுக்குருவி
என் கண் பார்த்து
பேசுகின்றது...!
... ... ... ....

குட்டி குட்டி
மழைத்துளிகளை
எனக்குள் தாங்கி
உருவமில்லா கடவுள்
சிலையாய் உருவான
ஒர் உணர்வு....!

என் ஆசைகளை 
காட்சியாக்கி
மேகங்களின் அசைவில்
இசையெடுத்து
என் இதயத்துடிப்பில்
ஒளியெடுத்து
பூஜித்த உணர்வு
அது....!

சாதாரண ஒருவருக்கு
பரிசளிக்க விருப்பமின்றி
பவித்திரமாய்
எனக்குள்ளேயே பதுக்கி 
வைத்த உணர்வு....!

இந்த அழகிய 
புனிதத்தை
மதிக்கத் தெரிந்த
ஒருவன்
எங்கிருக்கப் போகின்றான்...!

நெஞ்சம் இரும்பானது
பக்குவம் கூடானது
உணர்வை இருக்கி 
அறிவு பூட்டிக் கொண்டது
கசியவும் விடாமல்....!

சந்தோச பூக்களிலிருந்து
எழும்பி
பக்குவம் பூத்த
கண்களோடு
என் எதிர்கால
வாசத்தை
பேச்சிலே ஏந்தி
தாய்மையை
அசையும் கரங்களில்
சுரந்து வந்தான்
ஒருவன்.....,

நெஞ்சம் இளகி
பக்குவம் இன்னும்
பதமாகி
அறிவு திறந்து 
புனித உணர்வுக்கு
வழிவிட்டது....!

உருவமற்ற சிலை
உருக்கொண்ட 
ஆத்மாவானது...!

மேக இசை உயிர்பெற்றது
இரத்தத் துளிகளில்
மொட்டுக்கள்
மலர்ந்தன..!

"மேகா" என 
செல்ல பெயர் சூட்டி
தீப்பொறியின் மென்மைக்குள்
ஒருவித மௌனம் சேர்த்து
மனதுக்குள் காதலனானான்....!

என்று......
என் கண்ணுக்குள்
காதலை தொற்ற செய்து
மிகுதியை தொடக்கி

எதிர்கால கனவுகளோடு
மேக காதலாய்
பறந்து சென்றது
சிட்டுக்குருவி....!
... ... ... ...

மீண்டும் வருமா
வந்து அதன் அன்பு
பேசுமா..
கசிகின்ற காதலோடு
காத்திருக்கின்றேன்.

-பிரியசகி-
2016.12.16

புதன், 7 டிசம்பர், 2016

உங்கள் உணர்வு தலைப்புச் சொல்லும்

பூக்களின் சிரிப்பைத் 
தொட்டுப்பாருங்கள்...,
(மலர்களின் மலர்ச்சியை
மணந்துப் பாருங்கள்)
மலரும்.....,
மங்கும்...,
மக்கும்.....,
மடியும்.....,
மங்கிப்போவதை எண்ணி 
மலர மறுப்பதில்லை....!

பூப்பதும் மடிவதும்
இரு நிகழ்வுகளே....,
புவியசைவு நிகழ்வில்
இதென்ன ஆச்சர்யம்.....!

புல்லுக்கும் சொந்தமான
புதுமை புணர்ச்சியில்
பூத்தப் பூவை 
உன்னுள்ளங்கை மேடு 
உரசிப்பார்க்க 
ஆசைகொள்கையில்
சிறு சஞ்சலமும்
உள்ளத்தை உரசுவது
இயல்புதானோ.....?

அழகானப் பாசப்பூவை
ஆசையோடுப் பறித்து
நெஞ்சோடுப் 
பொத்திக்கொள்கிறாய்.....,
உடல் பிரியும்
கடைசி நிமிடத் துளியில்
உயிரிணையும்
நெற்றி முத்தப்பூ
என்றெண்ணி.....!

ஆனால்.......,
நாளின் ஒருப்பாதி
முடிந்து மறுப்பாதி
தொடங்கும் முன்னேயே
இளம் மலர் 
இளமை மாறமுன்
நகர்ந்துப் போய்விடலாம்.....!

அல்லது.....,
பொழிவு மறைந்து
பக்குவம் சேர்ந்து
பொன்னிறம் 
உடல் போர்த்தும் வரை,

நீ உள்ளெடுக்கும்
மூச்சுக்காற்றாக
மூச்சுக்குழலுக்குள்
பாசத் துளைகளிலும்
சண்டைத் துளைகளிலும்
பின், சமரசத்துளைகளிலும்
மாறி மாறி நுளைந்து
உன் இறப்பு வரை 
இசை மீட்கலாம்......!

எதுவெனிலும் 
உன் உள்ளம்
சொல்லுவதை செய்....
மலர்வதும் மங்குவதும்
இரு நிகழ்வுகள் தானே....???
காதலும்தான்......!!!

2016.12.07

உன் விரல்கள் தயங்காது....

பூக்களின் சிரிப்பைத் 
தொட்டுப்பாருங்கள்...,
மலரும்.....,
வாடும்....,
விழும்......,
வீழ்வதை எண்ணி 
மலர மறுப்பதில்லை....!

வீழ்வதும் எழுவதும்
இரு நிகழ்வுகள்.
இரண்டும் தொடர்வதில்
என்ன ஆச்சர்யம்.....!

ஏதோவோர் மலரை
வீழ்த்த உன் விரல்கள்
தயங்காது எழும்போது,
நீ இன்னொன்றால்
வீழ்த்ப்படுவதில் 
எங்கே புதுமை....!

2016.12.07

ஞாயிறு, 20 நவம்பர், 2016

பிடித்துத் தாருங்கள்


பறக்கும் வண்ணத்துப்பூச்சியை
பிடித்துத் தாருங்கள்
அதன் சுதந்திரத்தை
பறித்துக்கொண்டு
விட்டுவிடுகிறேன்...!

....பிரியகி....

2016.11.13

அவள் மனம் சொல்லும் அழகுணர்வு

சிரிப்பில் சிலை செய்கிறாய்
சின்ன கன்னங்கள் 
சிந்திக்கும்,

தாடை நுனியில்தான்
அழகை 
குவித்திருக்கிறாளோ...?

மேல் உதட்டைப் புதைத்து 
மூக்கைத் தொடும்
இரு கோடுகளில்தான்
சூட்சுமம் ஒளித்திருக்கிறாளோ...?

அவள் கண்கள் காணாத 
அதிசயம்.....!

அவள் மனம் சொல்லும்
அழகுணர்வு 
ஓடிக்கொண்டிருக்கிறது
வரிகளாக,
அவள் நெற்றியில்...!

அவள் வாய் சிரிப்பிற்கு
துணையாக சிரிக்கும்
கண்ணோரச் சுருக்கங்ள்
செவிகளுக்கு 
இரகசிய தூது அனுப்ப 
முயல்கிறது.....!

....பிரியசகி....
2016.11.12

நிலையான அன்பு நீ எனக்கு வேண்டும்!

நிலையான அன்பு
நீ எனக்கு வேண்டும்!

நீ பருகும் நித்திய
தேனீராய்
உன் நட்பு எனக்கு!
குழந்தையாய் உன்
நெஞ்சிலும் சுருளுவேன்!
தாயாய் எனக்குள்ளும்
அணைப்பேன்!
உன் முத்தங்கள்
என் அணுக்களை 
துளிர்விடச் செய்யலாம்!
என் ஏற்புக்கள் உன்னை 
நிலைக்கச் செய்யலாம்!

நிலையான அன்பே.....!
நீ....
எனக்கு வேண்டும்......!

....பிரியகி....
2016.11.13

உயிர்கள் பேசும் மௌனம்....,

உயிர்கள் பேசும் மௌனம்....,
உணர்வுகள் அமைதியின்
ஊஞ்சலில்......,
காற்றோடு மோகனம்
இசைக்கும்
இரு இதய சுவாசம்....,
அவள் உள்ளெடுக்கும்
மூச்சிலே,
அவன் பாசத்தில்
சிரிக்கும் குழந்தையில்
அர்த்தமாக்கப்படுகிறது
காதலும்தான்......!

....பிரியசகி....
2016.11.13

சனி, 27 ஆகஸ்ட், 2016

தங்கைகளின் தேடல்

வேரொரு ஆண்
மடி சாய்ந்தால்
காம கொடுரன்
என்றே நினைத்திருந்தேன்....

ஆண் தொடுகையிலிருந்து
கவனம் காக்க
சொல்லியுமிருந்தாள்
தாய்....

முதல் முறை
பனிபடர்கள் மேல்
சூரிய கதிர்கள்
பாசகுளிராய் இருந்தது....

வானும் நகல்
எடுத்திருக்கும்
விஞ்ஞானிகள் பெயர்
தேடுகிறார்கள்....

அன்றைய நாள்
மேகம் சேர்ந்த
புது வான் காட்சிக்கு....

அவன் மடிசாய்ந்தான்
பாசம் ஒன்றைத்தவிர
வேரொன்றையும்
உணரவில்லை....

எத்தனை அழகான
ஆண் அவன்
நல்லவன் என
உணர்ந்தப் பின்னே....

அதற்கு முன்
கறுத்தவொரு
வெறும் 
பிண்டம்தான்....!

பிரியசகி
27.08.2016

வியாழன், 25 ஆகஸ்ட், 2016

அழகெல்லாம் அழகில்லை

அழகெல்லாம்
அழகில்லை
உண்மையில் இங்கு 
யாரும் அழகை
அடையாளம் காணவில்லை
அர்த்தமற்ற அழகு
அடையாளமின்றியே போகும்,
ஆனந்தம் தருவது மட்டும்
அழகில்லை
துன்பத்தையும் அழகென
உணர்வது அழகு....
சிக்கலுள்ள வாழ்விலும்
உளநிறைவடைவது
அழகோ அழகு....
தன்னை சுற்றியுள்ளவர்களை
மகிழ்ச்சியோடு வைத்திருப்பது
அழகு....
கொஞ்சிக் குலாவுதலில்
மட்டும் பாசத்தை 
நம்பாது,
தூரம் நிற்கும்
உண்மையில் 
மறைமுக பாசத்தை
அனுபவிப்பது
அடடா... 
எத்தனை அழகு....
தனக்கு பிடித்தவர்
நலனுக்காய் பிராத்திப்பது
உண்மையாகும் அழகு....
பிடித்தவர்களுக்கு
பிடித்ததைத் தேடிபெற்று
வழங்கும் போது
நிலையான அழகு...
பொய்யை ஏற்கத்தெரியாமல்
உண்மையோடு
வெகுளியாய் இருப்பதுக்கூட
அழகுதான்....!
இந்த
அழகான மாலையை
அணிய விரும்புவது
ஆழமான அழகு....!

25.08.2016
பிரியசகி

வண்ணத்துப்பூச்சு

வண்ணத்துப்பூச்சு
குரலொலி
கேட்க விரும்புகிறேன்
அது தன் நிறங்களின்
அழகை கண்பது
எந்தக் கண்ணாடியிலாம்...?

தன் மேனி ஓவியங்கள்
பற்றி என்ன நினைக்கிறதாம்?
அவலட்சனத்தில் பூத்த
பூவென்று
தாழ்வு கொள்கிறதாமோ...?
இல்லை,
இயற்கை உமிழ்ந்த
எச்சில் சாயம்மென்று
அருவெறுப்புக்கொள்கிறதாமா...?

தன் இறக்கைகள் 
பற்றி நினைப்பது
என்னவாம்...?
அண்டவெளியில் காற்றோடு
போராடும் உறுதியில்லா
சருகு என
நொந்துகொள்கிறதாமா...?
பூமியின் ஈனப்பிறவிக்கான
அடையாளம் என
சலித்துகொள்கிறதாமா....?

வண்ணத்துப்பூச்சியின்
குரலொலியை
பதிவுசெய்து தாருங்களேன்...
இல்லையேல்
என்னிடம் பேசச்செய்யுங்கள்....

நாங்கள்
உன் அழகையும்
உன் சுதந்திரத்தையும்
சொல்லி சொல்லி
வாயூரிப்போகிறோம்.
உண்மையில் நீ உன்னைப்பற்றி
நினைப்பது என்ன...?

என்பதைக் கேட்டுத்
தெளிந்துக்கொள்கிறேன்...!

பிரியசகி
25.08.2016

புதன், 24 ஆகஸ்ட், 2016

அழகொன்றும் அதிசயமில்லை

அழகொன்றும்
அதிசயமில்லை
அழகுக்கு அர்த்தம்
அவள் தான்,
அழகைப் புரட்டி
படிக்கத் தெரிந்தவள்,
அழகைப் பூசிக்கொள்ள
மறக்காதவள்,
ஒரு போதும் 
அழகைத் தேடி 
களைத்திடமாட்டாள்,
அழகை உருக்கி
ஆயுதமும் செய்வாள்,
அழகை வார்த்து
மொழிகளும் சமைப்பாள்,
வண்ணத்துப்பூச்சியின்
இறக்கைகளில் 
ஒட்டிக்கொள்வாள்,
காக்கைகளின் சொண்டில்
தேன் உறிஞ்ச முற்படுவாள்,
குப்பைத்தொட்டி
உடைந்தக் கண்ணாடியிலும்
தன்னை அழகுபார்ப்பாள்...
யார் அவளை காணாவிட்டாலும்
அவள் அவளை பார்ப்பாள்
இல்லாத கண்களால்
அல்ல,
உதடுகள் மறுத்தாலும்
சிரித்துக்கொண்டேயிருக்கும்
அவள் உள்ளத்தால்....!

அதோ...
தன் அழகுக்கு ஒத்துவரும்
ஆடையை தேடி
ஓய்ந்துபோன
மங்கையின் முகம்
அவள் உள்ளத்துக்குள்
செல்ல மறுக்கிறது....!

பிரியசகி
25.08.2016

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

மகள்களுக்கு மட்டும்தான் தெரியும் முத்தம் காமத்தில் இல்லையென.....

வாழ்க்கையைப்
பிழிந்தெடுத்த
சாரில்
இருள் வான்
நிலவொளியும்
ஒளிந்திடும்....!

எரியும் நட்சத்திர 
மினுங்களும்
எட்டியேனும் பார்க்காது....!

தெளிவற்ற சிக்கல் 
நாளும் வேகும்
நெஞ்சில்....!

முடிச்சுகள் தொடரும்,
ஓய்ந்துப் போகும்
உள்ளம்
உளநிறைவைத்
தேடி....!

வற்புறுத்தி எடுப்பித்த
மகிழ்ச்சியும்
தண்ணீரில் அணையும்
நெருப்பு.....!

பெண்களுக்குப்
பிடித்த
தந்தை உறவை
கொண்டாடிட
அவள் மட்டும்
விரும்பாமலில்லை....!

பாவம் அவள்,
மது மணத்திற்கு
முத்தமிட 
இன்னமும் 
பழகிடவில்லை....!

வந்து வாய்க்கும்
உறவாவது
விரும்பி 
அணைக்கும்படி
அமையுமோ என்னமோ....!

இல்லையெனில்,
சம்பிரதாயம் 
உறவிலும் 
வெறும் உடல்
பிணமாய் கிடப்பாள்....!

சம்பிரதாய சமுகத்தில்
அதை மறுக்கத்
தெரியாதவளாய்....!

பிரியசகி
21.08.2016

திங்கள், 15 ஆகஸ்ட், 2016

விண்ணுலகம் அழைத்தானோ........?


ஆனந்த
யாழைக் கொண்டு
மீட்டினாய் 
உள்ளத்தை உருகிட
செய்யும் பல
வண்ணக் கவிகளை.....

உன்
பேனா மை தொட்டு
பிறந்த கவிதைகளும்
கண்ணீர் சிந்துதய்யா
எங்களைப் பிறசவித்த
தாய் எங்கே என்று...........
அகரம் முதல்
சிகரம் வரை - உன்
பேனா மை தொடாத
இடமும் இல்லை...
அரிச்சுவடியில் - நீ
ஸ்பரிசிக்காத
எழுத்துக்கழும் இல்லை....
நீ
பெற்றெடுத்த
கவி முத்துக்களுக்கு
ஈடு இணையும் இல்லை.....
உன்னைப் போல்
கவிஞனை
இனி உலகம்
காணப் போவதும் இல்லை.......
எழுத்துக்களும்
வைரமானதன்
அதிசயம் கண்டேன்
உன்
எண்ணங்கள்
காகித ஏடுகளில்
குழந்தையாக
தவழ்கையில்.........
மண்ணுலகில்
நீ வடித்த
கவிகளின் சுவையை
ருசித்திடத்தான்
அழைத்தானோ இறைவன் உன்னை
விண்ணுலகிற்கு.......
முகில் கூட்டங்கள்
வந்து போர்வை
விரித்திட
உன் இறுதிப்பயணத்தில்
பயணிக்கிறாய்
உன்
கவிதைகள் தந்த
சோகத்தில்
எம்மை
ஆழ்த்தி விட்டு.......

வியாழன், 11 ஆகஸ்ட், 2016

வியர்வைத்துளி

சாலையோரப்
பூக்களைக் கடந்துவரும்
காற்று நாசியினூடே
பரவிச்செல்ல....

தணல் பூத்த
தேகத்துக்குள்
நிலைக்குத்தாய் நின்று
பனிக்கட்டிகளாய் பதிந்து
உருகி பரவலானான்...!

தேகமெல்லாம் 
அவன் வாசம்
நெஞ்சமெல்லாம்
அவன் சுவாசம்....!

எத்தனை லேசாய்
நகர்கிறது இத்தேகம்
அவனுக்காய் கடக்கையில்
இச்சாலை வழியில்....!

தேகவாசம்
குருதியோட்டத்திலும்
பயணம்....
நினைவு நரம்பு
தூண்டல்...

அவன் கண்ணுக்குள்
வேப்பம் பூவின்
தேன்த்துளியில்
என் உயிர்த்துளியைத்
கலந்து நீந்தச்செய்வேன்....!

எனக்கும் அவனுக்குமான
இடைவெளியில்
சுற்றுகின்ற பம்பரத்தின்
மேற்பரப்பில்
சொல்ல தயங்கும்
ஆசைகளை அடுக்கி
பொருத்திடுவேன்....!

அசட்டுத்தனமான
தலைக்களைப்பையும்
வித்தியாசமாய் 
செய்திடும் அவன்
கைக்குள்,

குனிந்திட
என் தலையும்
லேசாய் அசைந்து 
வெட்கப்படும்....!

சிரிப்பிற்கு வஞ்சகமாய்
வார்த்தைகளையும்
விழுங்கி....
சொல் பாதியும்
செயல் பாதியுமாய்
நெஞ்சில் பதிவான்....!

சேர்ந்து நடக்கையில்
கைகள் உரச
காற்று முத்தமிட்டுச்
செல்லும்....
அவன் பார்வைக்குள்
நான் சிக்கி கிடப்பேன்....!
******
அடடா....
வந்து சேர்ந்ததுவே
கால்கள்...

தாவணி அலையும்
காற்றுமாய்
நானும் என்னுள்ளமும்....!

எங்கே அவன்
நிமிடங்கள் நகர்ந்தது....
ஏக்கங்கள் அழுகையாகி
ஒளிந்தது....!

திரும்பி நடந்த
கால்கள் 
கோவில் கோபுர
நிழல் கடந்து 
செருப்பை மாட்டிக்கொள்கையில்

ஆத்மப்புள்ளியை
தொட்டது 
ஒரு துளி வயர்வை
பாதம் நனைந்தது
ஒரு புள்ளியில்....!

பாதம் விட்டு 
செருப்பை அகற்றியப்படி
ஒரு உருவம்....
என்னுயிர் பொதிந்த
உருவம்....!

களைப்பும் வியர்வையுமாய்
முகம் உயர்த்த 
தயங்கியப்படி அவன்
அவ் முகம் நிமிர்தலுக்காய்
நான்....!

2016.08.11