இருள் வானில்
வான் பிரகாசிக்க
மின்னும் நட்சத்திரங்களை
தீப்பொறிகள் தெளித்து
அணைக்க எத்தனிக்கும்
விதி அறியாத
இந்தச் சின்ன உலகம்...!
உயிர்கள் உருவாக்கத்தின்
இரகசியம் தேடியழைகின்றனர்
மனித அபிமானிகள்....!
உள்ளதை கண்டுபிடித்திடும்
மனித அறிவியல்.
உருவான கதை மட்டும்
ஏனோ...
உளரிதான் வைக்கப்படுகிறது....!
உள்ளம்...
உணர்வு...
உணர்ச்சி...
இவை வெற்று உடலுக்குள்
காலங்கள் கடந்த
ஆத்மாக்கள் சுரக்கும்
அமுர்த விம்பங்கள்....!
அந்த விம்பங்கள்
தேகத்துக்குள் நதியென
ஓடும்
போகுமிடம் அறியாமலே...!
தான் நிலைக்க
தான் அற்ற பிறர்
நிலை அழிக்கத் துடிப்பதுதான்
அவ் விம்பங்களில்
தெறிக்கும் கூத்து....!
அன்பென்ற பூக்களின்
செயற்கை வாசம்
அகிலம் எங்கும் வீசும்,
யுத்த வன்முறைகளும்
அங்கேயே வேசம் போடும்....!
உண்மை வெளிச்சம்
மனிதவுடல் கண்களிலில்லை
இறை ஆத்மா ஒன்றே
உணரும்....!
பார் தாண்டிய பார்வையை
வீசி உண்மையை
உணர்...
அழிப்பதை மற...
நிலைப்பதையும் மற...!
அதோ தீப்பொறிகள்
ஒரு புறம்
மின்னும் நட்சத்திரங்கள்
ஒரு புறம்...
இறை ஒளி
இதமாக....
மூங்கில் காடுகளில்....!
பிரியசகி
2016.12.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக