சாலையோரப்
பூக்களைக் கடந்துவரும்
காற்று நாசியினூடே
பரவிச்செல்ல....
தணல் பூத்த
தேகத்துக்குள்
நிலைக்குத்தாய் நின்று
பனிக்கட்டிகளாய் பதிந்து
உருகி பரவலானான்...!
தேகமெல்லாம்
அவன் வாசம்
நெஞ்சமெல்லாம்
அவன் சுவாசம்....!
எத்தனை லேசாய்
நகர்கிறது இத்தேகம்
அவனுக்காய் கடக்கையில்
இச்சாலை வழியில்....!
தேகவாசம்
குருதியோட்டத்திலும்
பயணம்....
நினைவு நரம்பு
தூண்டல்...
அவன் கண்ணுக்குள்
வேப்பம் பூவின்
தேன்த்துளியில்
என் உயிர்த்துளியைத்
கலந்து நீந்தச்செய்வேன்....!
எனக்கும் அவனுக்குமான
இடைவெளியில்
சுற்றுகின்ற பம்பரத்தின்
மேற்பரப்பில்
சொல்ல தயங்கும்
ஆசைகளை அடுக்கி
பொருத்திடுவேன்....!
அசட்டுத்தனமான
தலைக்களைப்பையும்
வித்தியாசமாய்
செய்திடும் அவன்
கைக்குள்,
குனிந்திட
என் தலையும்
லேசாய் அசைந்து
வெட்கப்படும்....!
சிரிப்பிற்கு வஞ்சகமாய்
வார்த்தைகளையும்
விழுங்கி....
சொல் பாதியும்
செயல் பாதியுமாய்
நெஞ்சில் பதிவான்....!
சேர்ந்து நடக்கையில்
கைகள் உரச
காற்று முத்தமிட்டுச்
செல்லும்....
அவன் பார்வைக்குள்
நான் சிக்கி கிடப்பேன்....!
******
அடடா....
வந்து சேர்ந்ததுவே
கால்கள்...
தாவணி அலையும்
காற்றுமாய்
நானும் என்னுள்ளமும்....!
எங்கே அவன்
நிமிடங்கள் நகர்ந்தது....
ஏக்கங்கள் அழுகையாகி
ஒளிந்தது....!
திரும்பி நடந்த
கால்கள்
கோவில் கோபுர
நிழல் கடந்து
செருப்பை மாட்டிக்கொள்கையில்
ஆத்மப்புள்ளியை
தொட்டது
ஒரு துளி வயர்வை
பாதம் நனைந்தது
ஒரு புள்ளியில்....!
பாதம் விட்டு
செருப்பை அகற்றியப்படி
ஒரு உருவம்....
என்னுயிர் பொதிந்த
உருவம்....!
களைப்பும் வியர்வையுமாய்
முகம் உயர்த்த
தயங்கியப்படி அவன்
அவ் முகம் நிமிர்தலுக்காய்
நான்....!
2016.08.11