என் நாடி நாளங்களின்
இடைவெளிகளில்
இங்கிதமாய் இன்னலின்றி
இருக்கமாய் இணைந்து,
என்னுள் ஓடித்திரியும்
செங்குருதிக்கு
இசை வழங்கி
ஒரு விதமான
போதையை ஊட்டுகிறாய்...!
இமை மூடிய
விழிகளிலிருந்து
இரகசியமாய்
இதழ்களில் இழைந்து,
உன் பார்வை
உச்சரிக்கும் மந்திரத்தால்
உதடுகளை சுருக்கி
புன்னகையை
புணர்த்தி விடுகிறாய்....!
இருகி கிடக்கும்
இரசணையற்ற இதயம்
உன் குணமான
குறும்புகளால்
குலைந்து இலகி
வலிய தான் பார்க்கிறது...!
இயந்திரமாய்
இயங்கிக்கொண்டிருந்த
என் பொய்யான மெய்
தடல்புடலாய்
உத்வேகமடைகிறது...!
என்னில் வரண்டுப்போன
பாசத்திற்க்கு
இரையாகிவிடுகிறது.
உன் நேசத்தில் பூத்த
புன்னகையின்
இலாவணியம்....!
இருந்தும்
இந்த முரண்பட்ட
மனதிற்கு
இம்சைதான் நீ....!
....பிரியசகி....
இடைவெளிகளில்
இங்கிதமாய் இன்னலின்றி
இருக்கமாய் இணைந்து,
என்னுள் ஓடித்திரியும்
செங்குருதிக்கு
இசை வழங்கி
ஒரு விதமான
போதையை ஊட்டுகிறாய்...!
இமை மூடிய
விழிகளிலிருந்து
இரகசியமாய்
இதழ்களில் இழைந்து,
உன் பார்வை
உச்சரிக்கும் மந்திரத்தால்
உதடுகளை சுருக்கி
புன்னகையை
புணர்த்தி விடுகிறாய்....!
இருகி கிடக்கும்
இரசணையற்ற இதயம்
உன் குணமான
குறும்புகளால்
குலைந்து இலகி
வலிய தான் பார்க்கிறது...!
இயந்திரமாய்
இயங்கிக்கொண்டிருந்த
என் பொய்யான மெய்
தடல்புடலாய்
உத்வேகமடைகிறது...!
என்னில் வரண்டுப்போன
பாசத்திற்க்கு
இரையாகிவிடுகிறது.
உன் நேசத்தில் பூத்த
புன்னகையின்
இலாவணியம்....!
இருந்தும்
இந்த முரண்பட்ட
மனதிற்கு
இம்சைதான் நீ....!
....பிரியசகி....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக