புதன், 5 ஜூலை, 2017

நிலையான அன்பு

நிலையான அன்பு
நீ எனக்கு வேண்டும்!

நீ பருகும் நித்திய
தேனீராய்

உன் நட்பு எனக்கு!
குழந்தையாய் உன்
நெஞ்சிலும் சுருளுவேன்!
தாயாய் எனக்குள்ளும்
அணைப்பேன்!
உன் முத்தங்கள்
என் அணுக்களை 
துளிர்விடச் செய்யலாம்!
என் ஏற்புக்கள் உன்னை 
நிலைக்கச் செய்யலாம்!


நிலையான அன்பே.....!
நீ....
எனக்கு வேண்டும்......!

....பிரியகி....
2016.11.13

விதிப்பயணம்


விதிப்பயணம் வித்தியாசமான
ஒளியின் வழியில்....!
சிதறும் நீர்த்துளி
சிவந்த கன்னங்களில்
இரகசிய ஆழம் தேடி....! 

கோபுர சிலைகள்
என்றும்
இரசனையின் உச்சத்தில்....!
2017.05.03

திங்கள், 6 மார்ச், 2017

நீதானே நீயாக மாற்றினாய்

நானாக இருந்த என்னை
நீதானே நீயாக மாற்றினாய்
எதிர்காலம் நீயாக
இருந்த போது
எதிர்வரும் மணித்துளிகளில்
நான் உனதல்ல
என்ற நாடகத்தை
மாலையாக்க திட்டமிட்ட நீ
என் உணர்வுகள் அழியாது
என்பதை மறந்து போனாய்

ஞாயிறு, 5 மார்ச், 2017

நீ வருவாயென....

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வரைதல்
என் நாடி நாளங்களின்
இடைவெளிகளில்
இங்கிதமாய் இன்னலின்றி
இருக்கமாய் இணைந்து,

என்னுள் ஓடித்திரியும்
செங்குருதிக்கு
இசை வழங்கி
ஒரு விதமான
போதையை ஊட்டுகிறாய்...!

இமை மூடிய
விழிகளிலிருந்து
இரகசியமாய்
இதழ்களில் இழைந்து,

உன் பார்வை
உச்சரிக்கும் மந்திரத்தால்
உதடுகளை சுருக்கி
புன்னகையை
புணர்த்தி விடுகிறாய்....!

இருகி கிடக்கும்
இரசணையற்ற இதயம்
உன் குணமான
குறும்புகளால்
குலைந்து இலகி
வலிய தான் பார்க்கிறது...!

இயந்திரமாய்
இயங்கிக்கொண்டிருந்த
என் பொய்யான மெய்
தடல்புடலாய்
உத்வேகமடைகிறது...!

என்னில் வரண்டுப்போன
பாசத்திற்க்கு
இரையாகிவிடுகிறது.
உன் நேசத்தில் பூத்த
புன்னகையின்
இலாவணியம்....!

இருந்தும்
இந்த முரண்பட்ட
மனதிற்கு
இம்சைதான் நீ....!

....பிரியசகி....

சனி, 17 டிசம்பர், 2016

வகுப்பறை முதல் நாள்....

காற்றிலே வீசும்
பூ வாசம்
மழலைகளில் வீசும்
மொழி வாசம்....!

நட்சத்திரப் பூக்கள்
நிறைந்த வகுப்பறை,
ஒவ்வொருவரும்
பேச்சுப் பழகும்
செல்லக் கிளிகள்....!

மழை நீர் சேமித்த
செடி இலைகள்
அசைந்து ,
தானே தூவிய
பூத்தூரலாய்
சிட்டுகளின் குரலோசை....!

"வகுப்பறை முகாமைத்துவம்"
எனும் நூலில்
சிக்கிய சிலந்தியென நான்....!

கொதித்துப் பொங்கும்
பாலின் குதூகலம் அடங்க
உள் நுழைகிறேன்....!

சிறகு விரிக்க
எத்தனிக்கும் சிட்டுகளை
ஓரிடம் செதுக்கி
பதிப்பதில்தான்
கொஞ்சம் சஞ்சலப்பட்டு போனது
மனம்....!

"எங்கள் புது ஆசிரியை"
என செல்லமாய்
ஒட்டிக்கொண்ட 
பிஞ்சு உள்ளங்களில்
அழகாய் அப்பிக்கொண்டது
எனதுள்ளமும் தான்....!

இனி என் சந்தோசம்
பரவும் ஒரே இடம்...
நிரந்தர நிம்மதி உறங்கும்
இடம்
மழலைகளின் உள்ளம்
ஒன்றே.....!

....பிரியசகி....
2016.12.17

வெள்ளி, 16 டிசம்பர், 2016

வெளிச்சம்

இருள் வானில்
வான் பிரகாசிக்க
மின்னும் நட்சத்திரங்களை
தீப்பொறிகள் தெளித்து
அணைக்க எத்தனிக்கும்
விதி அறியாத 
இந்தச் சின்ன உலகம்...!

உயிர்கள் உருவாக்கத்தின்
இரகசியம் தேடியழைகின்றனர்
மனித அபிமானிகள்....!

உள்ளதை கண்டுபிடித்திடும்
மனித அறிவியல்.
உருவான கதை மட்டும்
ஏனோ... 
உளரிதான் வைக்கப்படுகிறது....!

உள்ளம்...
உணர்வு...
உணர்ச்சி...
இவை வெற்று உடலுக்குள்
காலங்கள் கடந்த
ஆத்மாக்கள் சுரக்கும்
அமுர்த விம்பங்கள்....!

அந்த விம்பங்கள்
தேகத்துக்குள் நதியென
ஓடும்
போகுமிடம் அறியாமலே...!

தான் நிலைக்க
தான் அற்ற பிறர்
நிலை அழிக்கத் துடிப்பதுதான்
அவ் விம்பங்களில்
தெறிக்கும் கூத்து....!

அன்பென்ற பூக்களின்
செயற்கை வாசம்
அகிலம் எங்கும் வீசும்,
யுத்த வன்முறைகளும்
அங்கேயே வேசம் போடும்....!

உண்மை வெளிச்சம்
மனிதவுடல் கண்களிலில்லை
இறை ஆத்மா ஒன்றே
உணரும்....!

பார் தாண்டிய பார்வையை
வீசி உண்மையை
உணர்...
அழிப்பதை மற...
நிலைப்பதையும் மற...!

அதோ தீப்பொறிகள்
ஒரு புறம்
மின்னும் நட்சத்திரங்கள்
ஒரு புறம்...
இறை ஒளி
இதமாக....
மூங்கில் காடுகளில்....!

பிரியசகி
2016.12.16

மேக காதல்...

என் வீட்டு முற்றத்திற்கு
தினம் வந்து போகும்
சிட்டுக்குருவி
என் கண் பார்த்து
பேசுகின்றது...!
... ... ... ....

குட்டி குட்டி
மழைத்துளிகளை
எனக்குள் தாங்கி
உருவமில்லா கடவுள்
சிலையாய் உருவான
ஒர் உணர்வு....!

என் ஆசைகளை 
காட்சியாக்கி
மேகங்களின் அசைவில்
இசையெடுத்து
என் இதயத்துடிப்பில்
ஒளியெடுத்து
பூஜித்த உணர்வு
அது....!

சாதாரண ஒருவருக்கு
பரிசளிக்க விருப்பமின்றி
பவித்திரமாய்
எனக்குள்ளேயே பதுக்கி 
வைத்த உணர்வு....!

இந்த அழகிய 
புனிதத்தை
மதிக்கத் தெரிந்த
ஒருவன்
எங்கிருக்கப் போகின்றான்...!

நெஞ்சம் இரும்பானது
பக்குவம் கூடானது
உணர்வை இருக்கி 
அறிவு பூட்டிக் கொண்டது
கசியவும் விடாமல்....!

சந்தோச பூக்களிலிருந்து
எழும்பி
பக்குவம் பூத்த
கண்களோடு
என் எதிர்கால
வாசத்தை
பேச்சிலே ஏந்தி
தாய்மையை
அசையும் கரங்களில்
சுரந்து வந்தான்
ஒருவன்.....,

நெஞ்சம் இளகி
பக்குவம் இன்னும்
பதமாகி
அறிவு திறந்து 
புனித உணர்வுக்கு
வழிவிட்டது....!

உருவமற்ற சிலை
உருக்கொண்ட 
ஆத்மாவானது...!

மேக இசை உயிர்பெற்றது
இரத்தத் துளிகளில்
மொட்டுக்கள்
மலர்ந்தன..!

"மேகா" என 
செல்ல பெயர் சூட்டி
தீப்பொறியின் மென்மைக்குள்
ஒருவித மௌனம் சேர்த்து
மனதுக்குள் காதலனானான்....!

என்று......
என் கண்ணுக்குள்
காதலை தொற்ற செய்து
மிகுதியை தொடக்கி

எதிர்கால கனவுகளோடு
மேக காதலாய்
பறந்து சென்றது
சிட்டுக்குருவி....!
... ... ... ...

மீண்டும் வருமா
வந்து அதன் அன்பு
பேசுமா..
கசிகின்ற காதலோடு
காத்திருக்கின்றேன்.

-பிரியசகி-
2016.12.16